Pages

சனி, 8 ஜனவரி, 2011

விழுப்புரத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை

விழுப்புரத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடக்கவுள்ளது. 08-01-2011 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.

இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் காமதேனு அரிமா சங்கம் மற்றும் விதைகள் கருத்துக்களம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இதில் மாணவர்கள் திறமை வளர்க்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செயப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு பயன் படும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இதில் மாணவர்களுக்கு மின்னஞ்சல் கணக்கு தொடங்குதல், புதிய வலைப்பதிவு தொடங்குதல், வலையில் செய்தி பதிவு செய்தல், தமிழ் வலைப்பதிவு திரட்டிகளில் இணைத்தல், அதன்மூலம் அதிகப்படியானவர்களை நமது செய்தியை படித்திடச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெற உள்ளனர்.

இந்த பயிற்சியை புதுச்சேரி வலைப்பதிவர் சிறக்த்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், மற்றும் வலைப்பதிவு திரட்டி நிறுவனர் "திரட்டி" ஏ.வெங்கடேஷ் இருவரும் நடத்துகின்றனர்.

இந்த பயிற்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையிடல், மாணவர்கள் பயன்படும் வகையில் உரைகள் நிகழ்த்துதல் ஆகியவை நடைபெற உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக