திங்கள், 1 அக்டோபர், 2007

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் கலந்து கொள்கிறார்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக புதுச்சேரி முதல்வரை சந்தித்து கடிதம் அளித்து வலைப்பதிவர் பட்டறையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். முதல்வர் கலந்து கொள்வதாக இசைவு அளித்துள்ளார். 
 
முதல்வரை காண திரு. கோ.சுகுமாரன், திரு. செயப்பிரகாசு, திரு. அருணபாரதியுடன் இரா. சுகுமாரன் உள்ளிட்டவர்கள் முதல்வரை சந்திக்க சென்றோம். முன்னதாக புதுச்சேரி கூட்டுறவு ஒன்றியத்தில் இடம் ஒப்புதல் பெறுவது என முடிவு செய்திருந்தோம். 
 
பின்னர் புதுச்சேரி சர்குரு உணவகத்தில் நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம். இந்த இடம் குளிரூட்டப்பட்ட வசதி கொண்டது. சுமார 100 பங்கேற்க வசதியானது. நகரின் உள்ளே அமைந்துள்ளது அமைதியான இடம் கடற்கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. போக்குவரத்து வசதியுடையது.

கருத்துகள் இல்லை: