slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

ஞாயிறு, 11 மே, 2008

விழுப்புரம் பயிலரங்கில் தமிழ் எழுத்துகள், விசைப் பலகைகள் குறித்து...

பயிற்சி அளிக்கிறார் பேராசிரியர் மு.இளங்கோவன்...
விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சர் திரு. க. பொன்முடி அவர்கள் பயிலரங்கில் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்க உள்ளார்கள். 
 
தற்போது பேராசிரியர் மு.இளங்கோவன் தமிழ் எழுத்துகள் குறித்துப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தமிழ் 99 விசைப் பலகைப் பற்றி விரிவாக பேசிக் கொண்டிருக்கிறார். பங்கேற்பாளர்கள் பலர் தங்கள் அய்யங்களைக் கேட்டு அறிகின்றனர்.
 
இடையே, இரா.சுகுமாரன், மா.சிவக்குமார், பாலபாரதி ஆகியோர் மேலும் பல கருத்துக்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். 
 
மேலும், புதியதாக வாங்கிய கணினியில்கூட தமிழ் எழுத்து கட்டம் கட்டமாக தெரிவதாக பலர் குறிப்பிட்டனர், இது குறித்து செய்முறை விளக்கம் அளித்துக்
கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: