ஞாயிறு, 11 மே, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு விறுவிறுப்போடு தொடங்கியது...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு தொடங்கி விறுவிறுப்பாக நடபெற்றுக் கொண்டு இருக்கிறது. காலையில் இரா.சுகுமாரன் நிகழ்ச்சி பற்றி விளக்கினார். பின்னர் பேராசிரியர் மு.இளங்கோவன் அறிமுகவுரை ஆற்றினார். தொடக்க நிகழ்ச்சிக்கு அமைச்சர் திரு. க.பொன்முடி வர சிறிது நேராமாகும் என்பதால், பயிலரங்கு தொடங்கியது. 
 
சென்னை பதிவர்கள் மா.சிவக்குமார், பாலபாரதி ஆகியோர் மின்னஞ்சல் கணக்கு தொடங்குவது குறித்து வகுப்பு எடுத்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் மின்னஞ்சல் கணக்கு தொடங்கும் பணியில் மூழ்கியுள்ளனர் பயிற்சிப் பயிலரங்கிற்கு வந்திதிருந்தோர்.

கருத்துகள் இல்லை: