slide show code

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three

     

வெள்ளி, 21 மே, 2010

எழுத்துச் சீர்திருத்தம் செய்யக்கூடாது : வலைப்பதிவர் சிறகம் வலியுறுத்தல் - தினமலர்


தினமலர் முதல் பக்கம் » புதுச்சேரி செய்திகள்

எழுத்துச் சீர்திருத்தம் செய்யக்கூடாது : வலைப்பதிவர் சிறகம் வலியுறுத்தல்
மே 21,2010,00:00 IST

புதுச்சேரி: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்யப் போவதில்லை என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று வலைப்பதிவர் சிறகம் கோரிக்கை விடுத் துள்ளது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் கூறியதாவது: கோவையில் நடக்க உள்ள உலக செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என மாநாட்டின் ஒருங்கிணைப் பாளர் ராஜேந்திரன் கூறியுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது கொண்டு வரப்படும் எழுத்து மாற்றம் முன் னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமியால் முன்மொழியப்பட்டது. இதன்படி மாற் றம் செய்தால் தமிழில் 80 விழுக்காடு சொற்களும் 59 விழுக்காடு எழுத்துக்களும் மாறும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தமிழில் எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் பல்லாயிரக்கணக்கான அரிய தமிழ் நூல் கள், இணையத்தில் உள்ள அரிய தகவல்கள் பயனற்றுப் போகும் ஆபத்து உள்ளது. தமிழக அரசின் இந்த எழுத்து மாற்ற அறிவிப்புக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, அதனை முதல்வரோ அல்லது தொடர்புடைய அமைச்சரோ அறிவிப்பு செய்து சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அமைப்புக் குழு உறுப்பினர்கள் சுகுமாரன், பேராசிரியர் இளங்கோ உடனிருந்தனர்.

1 கருத்து:

குமாரவேல் சொன்னது…

தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருவதற்கு நன்றி