இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகம் இடம்பெறவேண்டும் –தினமணி செய்தி

புதுச்சேரி பிப்-20 விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகள் அதிகமாக இடம்பெறவேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி அ.ரவிசங்கர் தெரிவித்தார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் விக்கிப்பீடியா அறிமுக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இதில் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி ரவிசங்கர் பேசியது.

விக்கிப்பீடியா என்பது ஒரு இலவச கலைக்களஞ்சியமாகும், இதில் தமிழ்க் கட்டுரைகள் அதிகம் இடம்பெறச் செய்யவேண்டும். விக்கிப்பீடியா தமிழ் மொழி உள்ளிட்ட மொத்தம் 279 மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியில் இதுவரை 28,023 கட்டுரைகள் உள்ளது. கட்டுரைகள் எண்ணிக்கை வரிசைபடி உலக மொழிகளில் தமிழ் மொழி 68-வது இடத்தில் உள்ளது.

விக்கிப்பீடியாவை  யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம். தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் இதில் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழை தட்டச்சு செய்ய தமிழ் 99 என்ற முறை எளிமையானது. அதை அனைவரும் பயன்படுத்த முயலவேண்டும் என்றார்.
பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்திகளைப் பதிவது குறித்தும், தமிழ் 99 விசைப் பலகையை எளிமையாக பயன்படுத்துவது குறித்தும் மடிகணினி கொண்டு விளக்கினார்.

வலைப்பதிவர் சிறக ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

புதுச்சேரியில் விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்

விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்



 இடம்: வணிக அவை சிறிய அரங்கம், நாள்: 20-02-2011 ஞாயிற்றுக்கிழமை,
காலம்: காலை 10.00 மணிமுதல் பகல் 1.00 மணிவரை

தலைமை: இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,
(புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்)
நிகழ்ச்சி நிரல்: 10:00 – தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்
11:00 – விளக்கப் பயிற்சிகள்
12:00 – கலந்துரையாடல்
விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்து விளக்கம்:
அ.ரவிசங்கர், நிர்வாகி (விக்கிப்பீடியா-தமிழ்)

விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது தளையற்ற உள்ளடக் கங்களைக் கொண்ட ஒரு இலவச கலைக்களஞ்சியமாகும் (encyclopedia). பலரின் கூட்டு முயற்சியால் பல மொழிகளில் கட்டமைக்கப்படும் கலைக்களஞ்சியமாகும். இது இலாபத்தை எதிர்நோக்காத விக்கிமீடியா அறக்கட்டளையின்  திட்ட ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியா தமிழ் மொழி உள்பட மொத்தம் 279 மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியில் இதுவரை 28,023 கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகள் எண்ணிக்கை வரிசைபடி உலக மொழிகளில் தமிழ் மொழி 68-வது இடத்தில் உள்ளது. இந்திய மொழிகளில் இந்தி (67,589),  தெலுங்கு(47,386),  மராத்தி(32,598) மொழிகளுக்கு அடுத்த நிலையில் தமிழ் (28,036) கட்டுரைகள் இடம் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

இந்த விக்கிப்பீடியாவை நீங்களும் தொகுக்கலாம். தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் இதில் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிபீடியா திட்டங்களை அறிமுகம் செய்து விளக்கப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் கலந்து கொண்டு பயன்பெறவும், தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பை செலுத்தவும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

கைப்பேசி: 94431 05825, மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com,
வலைப்பூ:  http://www.puduvaibloggers.blogspot.com,
இணையதளம்: www.pudhuvaitamilbloggers.org

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

"தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை சேர்க்கக்கூடாது"- தினமணி செய்தி


புதுச்சேரி, ஜன.1- தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை  சேர்க்க்க்கூடாது என்று, புதுச்சேரியில் நடைபெற்ற தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் தமிழ் ஒருங்கு குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடுவணிக அவை அரங்கில்  ஞாயிற்றுக்கிழமை நடந்த்து. இதில் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் கலந்து கொண்டு கைபேசியில் மின் நூலை வெளியிட்டார். அதன் முதல் படியை அதன் முதல் படியை  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் பெற்றுக்கொண்டார்.
தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது என்பதோடு, 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும்
எ, ஒ, ழ, ற, ன உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களைக் கிரந்த எழுத்தில் சேர்க்கக் கூடாது .தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்பே மத்திய அரசு கிரந்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டும்

இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு ஒன்றினை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.கபில் சிபல், தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் நீதிபதி மோகன்,  அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு திரட்டி பொறுப்பாளர் வெங்கடேசு முன்னிலை வகித்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரையும் மென்பொருள் வல்லுனர் க.அருணபாரதி வரவேற்றார்.


     உத்தமம் பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் இராம.கி, தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை பேராசிரியர் நா.இளங்கோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழ்த்தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன், இலக்கியக் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழநம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

     தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் ம.இளங்கோ நன்றி கூறினார்.

தமிழ் மொழியில் கிரந்தகத்தை கலந்தால் விளைவுகள் ஏற்படும்- தினகரன் செய்தி



தமிழ் அறிஞர்கள் எச்சரிக்கை

புதுச்சேரி, ஜன. 31:
தமிழ் மொழியில் கிரந்தகத்தை கலந்தால் பல விளைவுகள் ஏற்படும் என்று தமிழ் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ் ஒருங்குகுறியில் கிரந்தகக் கலப்பு எதிர்ப்பு மாநாடு புதுவை வணிக அவையில் நேற்று நடந்தது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் தலைமை தாங்கினார். மென்பொருள் வல்லுநர் அருணாபாரதி வரவேற்றார். வெங்கடேசு முன்னிலை வகித்தார். சென்னை பல்கலைக்கழக தமிழ்துறை முன்னாள் தலைவர் தெய்வசுந்தரம் கலந்து கொண்டு மின் நூலை வெளியிட முதல் படியை மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலர் சுகுமாரன் பெற்றுக்கொண் டார். புதுச்சேரி இயற்கை கழகம் தங்கப்பா, காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்துறை இளங்கோ, தமிழர் தேசிய இயக்கம் அழகிரி, தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு தமிழ்நம்பி, புதுவை தமிழ் எழுத்தாளர் கழகம் தமிழ்நெஞ்சன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பேசும்போது, கிரந்தகத்தை தமிழில் கலந்தால் பல விளைவுகள் ஏற்படும். நாம் தெரிந்தே வேற்று எழுத்துகளை நம் மொழியில் கலக்க அனுமதிப்பது தற்கொலைக்கு சமமானது என்றனர். இளங்கோ நன்றி கூறினார்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது புதுவைத் தமிழறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் : தமிழோசை செய்தி

தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது

புதுவை தமிழறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம்

புதுச்சேரி, பிப்.1- தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை  சேர்க்க்க்கூடாது என்றும், 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் நேற்று முன்நாள் நடைபெற்ற தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழோசை, 01-02-2011
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் நேற்று முன்நாள் வணிக அவை அரங்கில் ‘தமிழ் ஒருங்கு குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு திரட்டி பொறுப்பாளர் வெங்கடேசு முன்னிலை வகித்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரையும் மென்பொருள் வல்லுனர் க.அருணபாரதி வரவேற்றார்.
     மாநாட்டை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும், அவர் திரட்டி நிறுவனம் தயாரித்த கைபேசி மின்னூலினை வெளியிட்டார். அதன் முதல் படியை  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் பெற்றுக்கொண்டார்.
     உத்தமம் பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் இராம.கி, தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை பேராசிரியர் நா.இளங்கோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழ்த்தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன், இலக்கியக் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழநம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
     தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் ம.இளங்கோ நன்றி கூறினார்.
  • தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது என்பதோடு, 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும்
  • எ, ஒ, ழ, ற, ன உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களைக் கிரந்த எழுத்தில் சேர்க்கக் கூடாது
  • தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்பே மத்திய அரசு கிரந்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
  • இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு ஒன்றினை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.கபில் சிபல், தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் நீதிபதி மோகன்,  அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.