இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

சனி, 22 மே, 2010

தமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு? - தமிழக அரசியல் இதழில் கட்டுரை!





தமிழ்மொழியை வளப்படுத்தும் வகையில் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழு, 72-எழுத்துக்களில் மாற்றம் செய்யலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.”

தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்களையும், கணினி வல்லுனர்களையும் கொதிப்படைய வைத்துள்ளது.
நடக்கவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விழாக்குழு துணைத்தலைவருமான வா.செ. குழந்தைசாமி தலைமையில் ரகசியமாக நடந்துவருவதாக தமிழுணர்வாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
இந்நிலையில்தான், இந்த தமிழ் எழுத்து வடிவச் சீர்திருத்த்தை எதிர்த்து புதுவையில் “புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்” என்ற அமைப்பு, தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டை நடாத்தியிருக்கிறது.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இரா. சுகுமாறனை சந்தித்துப் பேசினோம்.

“தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சியில் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழச்தைசாமி தி.மு.க. அரசின் ஊதுகுழலாக செயற்படுகின்றார். அவா எழுதிய கட்டுரையின்படி உயிர்மெய் எழுத்துக்களில் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகளில் மாற்றுக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கின்றார். அதன்படி எழுத்து மாற்றம் செய்தால் தமிழ்மொழி அறிவியல் மொழியாகவும், கணினியில் எளிதில் பயன்படக்கூடிய மொழியாகவும வளர்ச்சி பெறும் என கருத்தை முன்வைக்கின்றார். ஆனால் 72- எழுத்துக்களின் மாற்றம் தமிழில் 59-சதவிகிதம் மாற்றத்தை ஏற்படுத்து;ம் என ஆய்வாளர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளனர்.இது தமிழ்மொழியையே மாற்றிவிடும். இதனால் தமிழில் ஏற்கனவே உள்ள பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களும், இணையத்தில் உள்ள பல்துறை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்கங்களில் உள்ள செய்திகளும் பயனற்றுப்போகும். தமிழ் அறிந்தவர்கள் மறுபடியும் இந்த புதிய தமிழை படித்தாக லேண்டும். குறைந்த கல்வி அறிவு பெற்றவர்கள் முற்றிலும் கல்லாதவர்களாக மாற நேரிடும். அதனால்தான் அந்த மாற்றத்தை கடுமையாக எதிர்க்கின்றோம்” என்றார்.

இது குறித்து மக்கள் உரிமை கூட்மைப்பின் செயலாளரும், உத்தமம் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினருமான கோ. சுகுமாறனை சந்தித்துப் பேசினோம்.

“உலக அளவில் பல்வேறு நாடுகளின் தமிழர்கள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த எழுத்து மாற்றம் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். தமிழ்நாட்டுத் தமிழர்களை உலகத் தமிழர்களிடமிருந்து தனிமைப்படுத்து;ம். இதனால் தமிழ்மொழியின் வளர்ச்சியோடு, தமிழர்களின் நிலையும் பின்னுக்குத் தள்ளப்படும். எழுத்து மாற்றத்தை வற்புறுத்துவோர் கூறும் காரணங்கள் ஏற்கும்ம்படியாக இல்லை. எழுத்து மாற்றத்தால் கணினிப் பொறியியல் உழைப்பு குறையும். குறைவாக செயற்பட முடியும் எனக் கூறப்படும் கருத்தை கணினி வல்லுநர்கள் சான்றுகளுடன் மறுத்துள்ளனர்.

எழுத்து மாற்றம் செய்ய வேண்டுமானால், பலதுறை ;சார்ந்த அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து மிக நுணுக்கமாக ஆராய்ந்து படிப்படியாக மக்கள் ஏற்கும்படி செய்யவேண்டும். அதை விடுத்து அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததைப் போல் தமிழ் எழுத்து மாற்றம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் சீனாவில் கூட, அனைத்து அமைப்பினரையும் ஒன்று சேர்த்து குழு ஓன்;று அமைத்து பொதுவான எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தி அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.அப்படித்தான் இந்த அரசும் செய்யவேண்டும்” என்றார்.
இந்த மாநாடு குறித்து “தமிழ்வர்p வடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?” ஏன்ற நூலின் ஆசிரியரும் மூத்த தமிழ் அறிஞருமான திருச்சி இளங்குமாரனாரிடம் பேசினோம்.

“இந்திய மொழிகளில் மிக்க் குறைந்த எழுத்துக்கொண்ட மொழி தமிழ்தான். ஆதில் ஏன் மாற்றம் கொண்டுவர வேண்டும். தந்தை பெரியார் 11-எழுத்துக்களை மாத்திரம் மாற்றம் செய்தார். அதனால் எவ்வித இடையூறும் இருக்கவில்லை. இதற்காகப் பெரியார் மிகப் பெரிய தண்டனையை அனுபவித்தார். தமிழக அரசு அன்று அவரது புத்தகங்களை நூலகங்களில் வாங்க மறுத்தது. பின்பு எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபிறகுதான் அந்த எழுத்துக்களின் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. தமிழ்மொழி அழகிய நோக்கிலும், தத்துவ நோக்கிலும் மிகச் சிறப்பாக அமையப் பெற்றது.

புள்ளிக்கூடத்தில், நீதிமன்றத்தில், ஆட்சி ஆணை மொழியாக, கோவில் மற்றும் இசை மேடைகளில் தமிழ் இருக்கவேண்டம். இதைத்தான் 69-ல் “எல்லா நிலைகளிலும் தமிழ்” என்று அண்ணா சொன்னார். ஆனால் அவரை முன்மாதிரியாகக் கொண்டு ஆட்சி செய்யும் கலைஞர் 35-ஆண்டுகள் ஆகியும், எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த-பாதுகாக்கபபட்ட ஓர் மொழியை முப்பது நாட்களில் தொலைக்கப ;பார்க்கின்றார் கலைஞர். இந்த சீர்திருத்தத்தின் மூலமாக மெல்லத் தமிழ் இனி சாகும். தமிழ் முற்றிலுமாக குழி தோணடிப் புதைக்கப்படும்” என்றார் வேதனையோடு.
இது குறித்து அமெரிக்கத் தமிழ்ச்சங்க அமைப்பாளரும், உலகத் தமிழ் அமைப்புக்களின் பொதுச்செயலாளரும், வட அமெரிக்காவில் தமிழ் மேலநிலைப் பள்ளி நடாத்தி வருபவருமான சொர்ணம் சங்கரபாண்டியிடம் பேசினோம்.

“தமிழ் எழுத்துக்கள் சிரமமாக இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக தமிழக அரசு நிருபிக்கவில்லை. கற்பனையாகவே முடிவெடுத்து, தமிழ் எழுத்த வடிவத்தை எளிமைப் படுத்துகின்றோம் என முடிவெடுத்துள்ளது. இது நம் வீட்டிற்கு நாமே தீ வைப்பதற்கு சமம். தமிழர்களை திருமணம் செய்துகொண்ட வேற்ற மொழியினர்கூட தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றார்கள். இவர்கள் கூட தமிழ் எழுத சிரமம் என்று கூறியதில்லை;. ஜப்பான், சீன மொழிகள்pல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ளன. இவற்றை எழுதும்போது அவர்களுக்கு சிக்கல் வந்ததில்லை. இணையதளத்தில் கூட தங்குதடையின்றி புழங்குகின்றனர். எழுத்து மாற்றம் என்பது தமிழ்வழி கற்கும் அப்பாவி மாணவர்களைப் பாதிக்கும். எனவே இதனை அனுமதிக்கக் கூடாது” என்றார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் விழாக்குழுத் துணைத்தலைவரும், எழுத்துச் சீரமைப்பில் முக்கிய பங்கு வகிப்பவருமான வா.செ.குழந்தைசாமியிடம் இந்த எதிர்ப்புக்கள் பற்றியெல்லாம் பேசினோம்.
“இது பெரியார் முன்வைத்த எழுத்து சீரமைப்பிற்கு அடுத்த கட்டம். தமிழ்மொழி கற்பது நேரம் அதிகமாக செலவிடப்படுவதாக அறியப்பட்டு., அதை எளிமைப்படுத்தவே இந்த எழுத்துச் சீரமைப்பு. மேலும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றார்கள். அவர்களின் அடுத்த தலைமுறைக்கு இனிமையாகவும், எளிமையாகவும் நேரத்தை சேமிக்கும் வகையிலும் ஏழுத்து மாற்றம் அமைக்கப்படடுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 247-தமழ் எழுத்துக்களுக்கு நாம் 107-குறியீடுகளை கற்கின்றோம். இப்போது உள்ள சீர்திருத்தத்தின்படி 39-குறியீடுகள் கற்றாலே போதும். எனவே இந்த எழுத்து சீர்திருத்தம் அரசிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

ஏற்கனவே தற்கால சந்ததியினருக்கு தமிழ் தகறாராக இருக்கம் நிலையில், இந்த எழுத்துச் சீர்திருத்தம் தேவையா என்பதை அரசு ஆயிரம் முறை சிந்திக்கவேண்டும்.
—நன்றி தமிழக அரசியல்
தட்டச்சு உதவி: புகலிட சிந்தனை மையம்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

vimax vimax vimax vimax vimax vimax vimax