முதலியார்பேட்டையில் நடந்த தமிழ்கணினி விழிப்புணர்வு முகாமில் தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை அமைச்சர் தியாகராஜன் வெளியிட இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் பெற்றுக்கொண்டார். அருகில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் விஸ்வநாதன்.
தமிழ் கணினி விழிப்புணர்வு 
முகாம்: குறுந்தகடு வெளியீடு 
புதுச்சேரி, பிப். 18:  
புதுச்சேரி
 வலைப்பதிவர் சிறகம், புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் தமிழ்க் 
கணினி விழிப்புணர்வு முகாம் முதலியார்பேட்டை சுப்பையா இல்லத்தில் நேற்று 
நடந்தது. 
புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்ற 
தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் 
விஸ்வநாதன் வாழத்துரை வழங்கினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் 
ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன், காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மைய 
பேராசிரியர் இளங்கோ, பாரதியார் பல்கலைக்கூட உதவி பேராசிரியர் ராஜராஜன், கலை
 இலக்கிய பெருமன்ற துணைத்தலைவர் தேவதாசு முன்னிலை வகித்தனர். சபாநாயகர் 
சபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு முகாமை துவக்கி 
வைத்தார்.
 �தமிழா� தமிழ் மென்பொருள் குறுந்தகடை மின்துறை அமைச்சர் 
தியாகராஜன் வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் நாரா.கலை 
நாதன் பெற்றுக்கொண் டார். எல்லை.சிவக்குமார் தலைமையில் நடந்த நிறைவு 
விழாவில் பேராசிரியர் பசு பதி, தமிழ்நாடு கலை இலக் கிய பெருமன்ற செயலாளர் 
பரமேஸ்வரி, துணை தலைவர் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக