ஓசை செல்லா அவர்களின் பதிவு
புதுவை வலைப் பதிவர் பட்டறை, துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களின் உரை ,வீடியோ - பகுதி 1
நிறைவு விழா பார்க்காமல் சென்றவர்கள் ஒரு நல்ல நிகழ்வை
இழந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது... அதிலும் குறிப்பாக மா.சிவா,
வினையூக்கி போன்றவர்கள். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ
அவர்களின் உரை மிக மிக அருமை. தமிழை இணையத்திற்கு கொண்டு வந்த சீன அறிஞர்
சிங்கை அரசு, தமிழ் டேப் டாம் போன்றவற்றின் வரலாறு, ஒருங்குறி (யுனிகோட்),
தமிழனின் தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை பற்றிய ஒரு அருமையான உரையை ஒரு
மணிநேரம் நிகழ்த்தியுள்ளார். அது தான் அன்றைய நிகழ்வின் முத்தாய்ப்பு என்று
கூட சொல்லலாம்!
பின்குறிப்பு: இந்த ஒளிஒலிப்பேழையை தரவேற்றம் செய்ய மிகுந்த பாடுபட வேண்டியிருந்தது. யூ ட்யூபில் இவ்வளவு பெரிய பைலை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். ஆனால் கூகிள் கை கொடுத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக