இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

திங்கள், 10 டிசம்பர், 2007

புதுவை பதிவர் பட்டறை : திரு. பொன்னவைக்கோ பேசியதில் என்னவோ இடித்ததே...

 பிரேம் குமார் பதிவிலிருந்து..........

 

புதுவை பதிவர் பட்டறை : திரு. பொன்னவைக்கோ பேசியதில் என்னவோ இடித்ததே...

  புதுவை பதிவர் பட்டறை திசம்பர் 9, 2007 அன்று இனிதே நடைப்பெற்றது. புதுவை வலைப்பதிவர் சிறகத்தின் சார்பாக நடைப்பெற்ற இவ்விழாவில் மிகுந்த ஆர்வத்துடன் மக்கள் கலந்துக்கொண்டனர்.

சென்னை பதிவர் பட்டறையை நடத்திய குழுவிலிருந்தும் நண்பர்கள் வந்து கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்

மாலை நடைப்பெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புதுவை சட்டமன்ற தலைவர் திரு.ராதாகிருஷ்ணனும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு. பொன்னவைக்கோ அவர்களும் கலந்துக்கொண்டார்கள்.

திரு. பொன்னவைக்கோ அவர்கள் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் & பல்கலைக்கழகங்களின் சார்பாக தமிழில் பொறியியல் பாடங்கள் குறித்தும் அருமையாக பேசினார்.




தமிழ் இணைய பல்கலைக்கழகத்தை நிறுவியதில் பெரும் பங்களித்தவர் திரு. பொன்னவைக்கோ. இரத்தின சபாபதி என்ற இயற்பெயரை தமிழ்படுத்தி தாயார் பெயரான பொன்னி + அவைக்கோ (சபாபதியின் தமிழாக்கம்) சேர்த்து பொன்னவைக்கோ ஆனவர்.

'தமிழ் இனி மெல்ல சாகும்' என்ற கூற்றைப் பற்றி பேசுகையில் தமிழன் தான் தமிழை மதிக்க மறுக்கிறான் என்று கூறினார். பெற்றவளை பிள்ளைகள் தாய்மொழியில் அழைத்தால் அவமானமாக கருதுகிறோம், கோயில்களில் தமிழில் பூசை செய்தால் பலிக்குமா என்று அஞ்சுகிறோம் என்று குற்றஞ்சாட்டினார். தமிழை ஆங்கிலங்கலக்காமல் பேசிப் பழக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.


குட்டு : தமிழ் ஆர்வலர், தமிழில் தான் பேச வேண்டும் என்று வலியுறுத்துபவர், தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் அமைப்பாளர் என்று தமிழுடன் பெருந்தொடர்புக் கொண்டவர் கொஞ்சம் தமிழர்களின் கலாச்சார உடையில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கு

 

ஆங்கிலம் பேசுவதை மக்கள் கௌரவமாக நினைக்கிறார்கள், சமிஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்பவதை மக்கள் கௌரவமாக நினைக்கிறார்கள் என்று குற்றஞ்சொன்னவரே தமிழர்கள் கூடும் ஒரு கூட்டத்திற்கு 'கோட்டு சூட்டு டை' அணிந்து வருவதை கௌரவமாக நினைத்ததை என்னவென்று சொல்லுவது ?

கருத்துகள் இல்லை: